சிகரெட் கவிதை
உதட்டின் வழியே
புகையை
இழுக்கிறாய்....
உனக்கு நீயே
கொள்ளி
வைக்கிறாய்.....
உன்
நுரையீரல் எல்லாம்
கருகுகிறது
அதில உனக்கு
சுகம் கிடைக்கிறது....
நீ இழுக்கும்
புகையில்
தொண்ணூறு சதவீதம்
நிக்கோட்டின்
உன் நுரையீரலை
தொற்றி கொண்டிருக்கிறது...
புகைக்கும்போது எரிவது
நிக்கோட்டின்
சாம்பல் மட்டுமல்ல.....
உன் நுரையீரல்
ஆயுள் காலத்தின்
அழிவு.....
புகைப்பதால்
மனக்கவலை
குறையப்போவதில்லை...
ஆயுளை
குறைத்து
கொண்டே போகிறது...
ஆகவே
புகைப்பதை
இன்றோடு நிறுத்திவிடு
உன் இதயத்தை
ஆரோக்கியமாய்
வாழ விடு....
அடுத்தவர்
புகைக்க கொடுத்தால்
மறுத்துவிடு......
அடுத்தவருக்கும்
புகைப்பதின் தீமைகளை
விளக்கி சொல்லி விடு....
இனி
புகைக்க மாட்டேன்
என்று
உறுதி மொழி
எடுத்து விடு.....
அந்தப் புண்ணியத்தை
உன் குடும்பத்திற்கு
சேர்த்துவிடு....
நீ
புகைப்பிடித்தல்
மீதி நெருப்பில்
இயற்கை
மரமெல்லாம் எரிகிறது....
பொது இடத்தில்
புகை பிடிப்பதினால்
புகை
பிடிக்காதவர்களையும்
சேர்த்தல்லவா
அது பாதிக்கிறது...
புகைப்பிடிப்பதை
நிறுத்தி
புதிய வாழ்க்கையை
ஆரம்பிக்கப் போகும்
அனைவருக்கும்
இக்கவிதை
சமர்ப்பணம்......
இக்கவிதையை காணொளியாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇
https://youtu.be/-A3_htkejJc
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you visiting my poem